கோவையில் பழுது பார்க்க வந்த காரில் இருந்த அரிய வகை பறக்கும் பாம்பு - வனத்துறையிடம் ஒப்படைப்பு!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கார் சர்வீஸ் சென்டருக்கு பழுது பார்ப்பதற்காக கொண்டு வந்து விடப்பட்ட காரில் இருந்து அரிய வகை பாம்பான பறக்கும் பாம்பு மீட்கப்பட்டு பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே பழுது பார்க்க வந்த காரில் இருந்து அரியவகை பறக்கும் பாம்பு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் கார் சர்வீஸ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சர்வீஸ் சென்டருக்கு கார் ஒன்று பழுது பார்ப்பதற்காக கொண்டு வந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊழியர்கள் அந்த காரில் பழுது பார்க்க சென்ற போது அதில் சிறிய அளவிலான பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள பாம்புகள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த ரதீஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த ரதீஷ், காரில் இருந்த பாம்பை பத்திரமாக மீட்டார். பிடிபட்ட பாம்பு பறக்கும் பாம்பு என அறியப்படும் விஷத்தன்மையுள்ள பாம்பாகும்.

இந்த பாம்புகள் பச்சை நிறத்தில் கருப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிற குறுக்கு கோடுகளுடன் காணப்படுகிறது. ஆனால் இதன் விஷத்தன்மை மனிதர்களை பாதிக்காது என்றும், பறவைகள் மற்றும் சிறு பூச்சியினங்களை உண்பதற்கு மட்டுமே இதன் விஷம் பயன்படும் எனவும் கூறப்படுகிறது.

இவ்வகை பாம்புகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகளவில் காணப்படும். உயரமான கிளையிலிருந்து கீழே குதிக்கும் திறமையும், ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு தாவும் திறமையும் கொண்டதன் காரணமாகவே இவ்வகை பாம்புகள் பறக்கும் பாம்பு என அழைக்கப்படுகிறது.

காரின் உரிமையாளர் ஆனைக்கட்டி வனப்பகுதி அருகே சுற்றுலா சென்று திரும்பிய நிலையில், மரத்தில் இருந்து காரில் தவறி விழுந்திருக்கலாம் என பாம்புகள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பிடிபட்ட பறக்கும் பாம்பு மாவட்ட வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...