கோவையில் பழுது பார்க்க வந்த காரில் இருந்த அரிய வகை பறக்கும் பாம்பு - வனத்துறையிடம் ஒப்படைப்பு!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கார் சர்வீஸ் சென்டருக்கு பழுது பார்ப்பதற்காக கொண்டு வந்து விடப்பட்ட காரில் இருந்து அரிய வகை பாம்பான பறக்கும் பாம்பு மீட்கப்பட்டு பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே பழுது பார்க்க வந்த காரில் இருந்து அரியவகை பறக்கும் பாம்பு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் கார் சர்வீஸ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சர்வீஸ் சென்டருக்கு கார் ஒன்று பழுது பார்ப்பதற்காக கொண்டு வந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊழியர்கள் அந்த காரில் பழுது பார்க்க சென்ற போது அதில் சிறிய அளவிலான பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள பாம்புகள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த ரதீஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த ரதீஷ், காரில் இருந்த பாம்பை பத்திரமாக மீட்டார். பிடிபட்ட பாம்பு பறக்கும் பாம்பு என அறியப்படும் விஷத்தன்மையுள்ள பாம்பாகும்.

இந்த பாம்புகள் பச்சை நிறத்தில் கருப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிற குறுக்கு கோடுகளுடன் காணப்படுகிறது. ஆனால் இதன் விஷத்தன்மை மனிதர்களை பாதிக்காது என்றும், பறவைகள் மற்றும் சிறு பூச்சியினங்களை உண்பதற்கு மட்டுமே இதன் விஷம் பயன்படும் எனவும் கூறப்படுகிறது.

இவ்வகை பாம்புகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகளவில் காணப்படும். உயரமான கிளையிலிருந்து கீழே குதிக்கும் திறமையும், ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு தாவும் திறமையும் கொண்டதன் காரணமாகவே இவ்வகை பாம்புகள் பறக்கும் பாம்பு என அழைக்கப்படுகிறது.

காரின் உரிமையாளர் ஆனைக்கட்டி வனப்பகுதி அருகே சுற்றுலா சென்று திரும்பிய நிலையில், மரத்தில் இருந்து காரில் தவறி விழுந்திருக்கலாம் என பாம்புகள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பிடிபட்ட பறக்கும் பாம்பு மாவட்ட வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...