குன்னூர் அருகே சாலையில் நடந்து சென்ற நபர், தடுமாறி அரசு பேருந்தில் சிக்கி உயிரிழந்த சோகம்

குன்னூர் - ஒட்டுப்பட்டரை சாலையில் நடந்து சென்ற பத்திர விற்பனையக உரிமையாளர் முகமது கனி, கால் தடுமாறி சாலையில் விழுந்த நிலையில் அவ்வழியாக குன்னூர் நோக்கி சென்ற அரசு பேருந்து அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சாலையில் நடந்து சென்ற நபர், தடுமாறி விழுந்து அரசு பேருந்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூரில் பத்திர விற்பனையகம் நடத்தி வருபவர் முகமது கனி. இவர், குன்னூர் தாலுக்கா அலுவலகம், நீதிமன்றம், காவல்நிலையம் செல்லக்கூடிய மக்கள் அதிகம் பயணிக்கும் பிரதான சாலையில் உள்ள பத்திர விற்பனையகத்திற்கு நடந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், சாலையோரத்தில் இருந்த கேபிள் முகமது கனியின் காலில் சிக்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.



அப்போது, அவ்வழியே குன்னூர் நோக்கி வந்த அரசு பேருந்தின் பின் சக்கரம் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குன்னூர் நகர போலீசார், முகமது கனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...