குன்னூர் அருகே சாலையில் நடந்து சென்ற நபர், தடுமாறி அரசு பேருந்தில் சிக்கி உயிரிழந்த சோகம்

குன்னூர் - ஒட்டுப்பட்டரை சாலையில் நடந்து சென்ற பத்திர விற்பனையக உரிமையாளர் முகமது கனி, கால் தடுமாறி சாலையில் விழுந்த நிலையில் அவ்வழியாக குன்னூர் நோக்கி சென்ற அரசு பேருந்து அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சாலையில் நடந்து சென்ற நபர், தடுமாறி விழுந்து அரசு பேருந்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூரில் பத்திர விற்பனையகம் நடத்தி வருபவர் முகமது கனி. இவர், குன்னூர் தாலுக்கா அலுவலகம், நீதிமன்றம், காவல்நிலையம் செல்லக்கூடிய மக்கள் அதிகம் பயணிக்கும் பிரதான சாலையில் உள்ள பத்திர விற்பனையகத்திற்கு நடந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், சாலையோரத்தில் இருந்த கேபிள் முகமது கனியின் காலில் சிக்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.



அப்போது, அவ்வழியே குன்னூர் நோக்கி வந்த அரசு பேருந்தின் பின் சக்கரம் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குன்னூர் நகர போலீசார், முகமது கனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...