துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு உதகையில் மாணவர்கள் அஞ்சலி

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்த நிலையில், உயிரிழந்தோருக்கு உதகையில் பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். உறவினர்களை இழந்து வாடும் மக்களுக்காக பிரார்த்தனை செய்தனர்.



நீலகிரி: துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உறவினர்களை இழந்து வாடும் மக்களுக்காக, உதகையில் பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. 5 முறைக்கு மேல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக ஏரளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உயிரிழந்தோருக்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில் உதகையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.



மேலும் பள்ளி தாளாளர் செல்வநாதன் தலைமையில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, மௌன அஞ்சலி செலுத்திய மாணவர்கள் பின்னர் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்கள் மற்றும் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து வாடும் மக்களுக்காகப் பிரார்த்தனை செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...