துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு உதகையில் மாணவர்கள் அஞ்சலி

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்த நிலையில், உயிரிழந்தோருக்கு உதகையில் பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். உறவினர்களை இழந்து வாடும் மக்களுக்காக பிரார்த்தனை செய்தனர்.



நீலகிரி: துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உறவினர்களை இழந்து வாடும் மக்களுக்காக, உதகையில் பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. 5 முறைக்கு மேல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக ஏரளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உயிரிழந்தோருக்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில் உதகையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.



மேலும் பள்ளி தாளாளர் செல்வநாதன் தலைமையில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, மௌன அஞ்சலி செலுத்திய மாணவர்கள் பின்னர் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்கள் மற்றும் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து வாடும் மக்களுக்காகப் பிரார்த்தனை செய்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...