நீலகிரி மலைப்பாதையில் காட்டுயானைகள் முகாம் - வாகன ஓட்டிகள் தொந்தரவு அளிக்கும் வீடியோ வைரல்!

நீலகிரி மாவட்டம் கெத்தை மலைப்பாதையில் மின்வாரிய குடியிருப்பு அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அச்சுறுத்தும் வகையில், வாகனத்தை முன்னும் பின்னுமாக இயக்கி புகைப்படம் எடுத்து தொந்தரவு அளிக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூரிலிருந்து கோவை செல்லும் கெத்தை மலைபாதையில் 48 கொண்டை ஊசி வளைவுகளை உள்ளன. அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் இந்த மலைப்பாதையை உள்ளூர் மக்கள் கோவை சென்று வரவும், கேரளா மாநில சுற்றுலாப்பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வரவும் பயன்படுத்தி வருகின்றனர். வனப்பகுதிக்குள் இந்த சாலை இருப்பதால் காட்டு யானைகள் அடிக்கடி சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறிப்பது வழக்கமாக உள்ளது.



இந்நிலையில், கெத்தை மின்வாரிய குடியிருப்பை ஒட்டி உள்ள மாரியம்மன் கோவில் அருகே காட்டுயானைக்கூட்டம் ஒன்று கடந்த 2 நாட்களாக முகாமிட்டுள்ளன. இந்த யானை கூட்டம் சாலை ஓரத்திற்கு வருவதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று சில வாகன ஓட்டிகள் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காட்டு யானை கூட்டத்தின் அருகில் வாகனத்தை நிறுத்தி இடையூறு செய்தனர்.



இதனைக் கண்டு ஆத்திரமடைந்த யானை ஒன்று துரத்தி தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அவர்கள் வாகனத்தை முன்னும் பின்னுமாக இயக்கி புகைப்படம் எடுத்தும் தொந்தரவு செய்தனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவோர்மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...