கோவையில் ஜமேசா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 120 கிலோ வெடி பொருட்கள் அழிப்பு

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ அளவிலான வெடிபொருட்கள் சுல்தான்பேட்டையில் உள்ள தனியார் வெடிபொருள் உற்பத்தி நிறுவனத்தில் முறையாக அழிக்கப்பட்டது.



கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ வெடி பொருட்கள் முறையாக அழிக்கப்பட்டன.

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து சிலிண்டர் வெடிபொருள்களை காரில் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

மேலும் கோவையில் பல்வேறு இடங்களில் சதி திட்டத்தை தீட்ட ஜமேசா முபின் உள்ளிட்டோர் முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு, தற்போது வரை 13 பேர் கைது செய்யப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து முதல் கட்டமாக பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ அளவிலான வெடிப்பொருட்கள், கோவை சுல்தான்பேட்டை வாரப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் வெடி பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் மாநகர மற்றும் மாவட்ட போலீசார் உதவியுடன் என்.ஐ.ஏ அதிகாரிகள் முன்னிலையில் முறைப்படி அழிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...