கோவையில் சாரங் எனும் தலைப்பில் கோடை கால கண்காட்சி - பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள விஸ்பரிங் ஸ்டோன்ஸ் வளாகத்தில், தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் சார்பில் "சாரங்" என்ற தலைப்பில் கோடை கால இரண்டு நாள் (பிப் 3-4) கண்காட்சி நடைபெற்றது.



கோவை: கோவையில் கடந்த பிப்ரவரி 3 மற்றும் 4ஆம் தேதிகளில் தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் சார்பில் சாரங் எனும் கோடை கால கண்காட்சி நடைபெற்றது.



தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் சார்பில் முதல் முறையாக நிதி திரட்டுவதற்காக கோவை சிங்காநல்லூரில் கோடைகால கண்காட்சி நடத்தப்பட்டது.



சிங்காநல்லூர் அடுத்த பெர்க்ஸ் பள்ளி ஆர்ச் ரோட்டில் அமைந்துள்ள விஸ்பரிங் ஸ்டோன்ஸ் வளாகத்தில் இந்த கண்காட்சி நடைபெற்றது.



கடந்த 3ஆம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் கோடை கால மாதங்களில் அணிந்து மகிழும் வகையிலான ஆயத்த ஆடைகள் மற்றும் பிற பொருட்களை இடம் பெற்றிருந்தன.

இந்த கண்காட்சியின் துவக்க விழாவில், கோவை வருமானவரி துறை முதுநிலை ஆணையாளர் பூபால் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கண்காட்சியை துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் முன்னாள் தலைவர் சபிதா சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.



நாடு முழுவதும் உள்ள பல்வேறு கைவினை கலைஞர்கள் தயாரிப்பிலான பொருட்கள், இளைய தலைமுறையினர் கவனமுடன் தயாரித்த, நிலையான வேலைப்பாடுகள் கொண்ட புதுமையான வடிவமைப்பிலான ஆடைகள் அதிக அளவில் இதில் இடம்பெற்றன.



மேலும், பல்வேறு விதமான வீட்டு அலங்கார பொருட்கள், நகைகள் இந்த கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.



இந்த கோடை கால கண்காட்சிக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருகை தந்து, உடைகள், அலங்காரம் மற்றும் கைவினை பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இதனிடையே பசியுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு சுவையான உணவளிக்க கொங்கு நாட்டு சமையல், சுஷி, சாலட் பவுல், சாக்லேட், பட்டிசெரியே, ஜூஸ், சான்ட்விச், ஐஸ்க்ரீம் மற்றும் உள்ளுர் சுவையான சிற்றுண்டிகளும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...