பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் பொம்மலாட்டம் - ஆர்வத்துடன் கண்டுகளித்த திருப்பூர் மாணவிகள்!

திருப்பூரில் உள்ள பழனியம்மாள் அரசுப்பள்ளியில் வளரிளம் பெண்களின் தொடர் கல்வியின் அவசியம் குறித்து மாணவிகளுக்கு பொம்மலாட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சியை ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.



சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம், பொம்மலாட்ட கலைக்குழுவினர் சார்பில், வளரிளம் பெண்களின் தொடர் கல்வி மற்றும் பாதுகாப்பை எடுத்துரைக்கும் விதமாக பொம்மலாட்ட கலைப்பயணம் திருப்பூரில் இன்று தொடங்கியது. இந்த கலைப் பயணமானது, வரும் 12ஆம் தேதி தேனியில் நிறைவடைய உள்ளது.

இதில் திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி போன்ற தொழில் நகரங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் ஆடை உற்பத்தி தொடர்பான பல்வேறு வேலைகளுக்கு வளரிளம் பருவத்தினர் சென்று வருகின்றனர்.



இதனால், பள்ளி இடை விலகல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக, திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற பொம்மலாட்ட நிகழ்ச்சியின் மூலம் மாணவிகளுக்கு கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சியை, ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...