தாராபுரம் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி - திருடனை விவசாயி மடக்கி பிடிக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகிலுள்ள அலங்கியம் கனரா வங்கியில் துணிவு பட பாணியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை, விவசாயி லாவகமாக மடக்கிப்பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கனரா வங்கி கிளையில் அலங்கியம் காந்தி நகரில் வசித்து வரும் ஜெயக்குமார் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 19). இவர் தாராபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.



இந்தநிலையில், துணிவு பட பாணியில் கனரா வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட சுரேஷ், கருப்பு நிற பர்தா அணிந்து கைத்துப்பாக்கி மற்றும் டைம்பாம் எடுத்துக்கொண்டு கனரா வங்கிக்குள் நுழைந்துள்ளார்.



அப்போது, வங்கியில் அமர்ந்திருந்த அலங்கியம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கருணாகரன் (வயது 58) என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய சுரேஷ், பாமை வெடிக்க வைப்பதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.



அப்போது, எதிர்பாராதவிதமாக, சுரேஷ் கையில் வைத்திருந்த கத்தி கீழே விழுந்தது. அதை எடுப்பதற்கு சுரேஷ்க்கு கீழே குனிந்தபோது, சுதாரித்த விவசாயி கருணாகரன் தனது கழுத்தில் அணிந்திருந்த துண்டை எடுத்து சுரேஷின் கையில் மாட்டி லாவகமாக அவரை சுற்றி வளைத்து பிடித்தார்.



இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...