நீலகிரி உதகையில் பட்டப்பகலில் உலா வந்த காட்டெருமை - பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள எல்க்ஹில் முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் பட்டப்பகலில் உலா வந்த காட்டெருமையால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அச்சமடைந்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை எல்க்ஹில் முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் காட்டெருமை உலா வந்ததால் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் அச்சமடைந்தனர்.

உதகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வனப்பகுதிகளை ஒட்டி உள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டமும் இருந்து வருகிறது. குறிப்பாக காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

குடியிருப்பு பகுதிகள் மட்டுமல்லாமல் நகர்புற பகுதிகளிலும், விவசாய நிலங்களுக்குள்ளும் காட்டெருமைகள் அதிகமாக வருகின்றன.



இதனிடையே தைப்பூச திருவிழாவான இன்று எல்க்ஹில் முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையில் காட்டெருமை உலா வந்ததால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.



நீண்ட தூரம் சாலையிலேயே நடந்து சென்ற காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்றவுடன் பக்தர்கள் நிம்மதி அடைந்து கோவிலுக்குச் சென்றனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...