கோவை மேட்டுப்பாளையத்தில் திருட்டு: ஈரோட்டில் விபத்து - சிக்கிய கொள்ளையன்

மேட்டுப்பாளையம் அடுத்த பங்களாமேடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து ஒன்பது சவரன் தங்க நகைகளை திருடிச்சென்ற கொள்ளையன் ஈரோட்டில் விபத்தில் சிக்கி போலீசாரிடம் பிடிபட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் ஈரோட்டில் விபத்தில் சிக்கி போலீசாரிடம் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் அடுத்த பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் அதே பகுதியில் ஹோட்டல் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கார்த்திக் ஹோட்டலை கவனிக்க வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர், வீட்டில் வைத்திருந்த ஒன்பது சவரன் நகையை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற கார்த்திக் வீட்டின் பூட்டு உடைத்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த ஒன்பது சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து கார்த்திக் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் கார்த்திக் வீட்டில் கொள்ளையடித்த நபர் இங்கிருந்து தப்பி ஈரோடு சென்று அங்கு ஒரு பிக்கப் வாகனத்தை திருடி சென்றுள்ளார்.

அந்த வாகனம் ஈரேட்டில் திடீரென சாலை ஓரத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் ஈரோடு டவுன் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் விபத்தில் சிக்கிய வாகனத்தில் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.

அது குறித்து விசாரித்த போது விபத்தில் சிக்கிய நபர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சுந்தரவேல் என்பதும், தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இவர், மேட்டுப்பாளையத்தில் நகைகளை திருடியதும் தெரியவந்தது.

இதனையடுத்து விபத்தில் படுகாயமடைந்த சுந்தரவேலை போலீசார் மீட்டு சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை முடிந்தவுடன் கைது செய்தனர்.

இது குறித்து ஈரோடு போலீசார் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுந்தரவேல் நகைகளை திருடி செல்வது சிசிடிவியில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...