மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கோவையில் இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒடுக்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். மக்களுக்கு விரோதமாக பட்ஜெட் உருவாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.



கோவை: கோவையில் இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி பார்க் மைதானத்தில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததற்கும், ஊரக வேலைவாய்ப்பில் முன்னுரிமை பறித்ததற்கும் கண்டனம் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் நவீன் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால், காந்தி பார்க் மைதானம் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...