மேட்டுப்பாளையத்தில் சாப்பிட்ட உணவுக்கு காசு கேட்ட தள்ளுவண்டி கடைக்காரர் - கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் சாப்பிட்ட உணவுக்கு காசு கேட்ட தள்ளுவண்டி கடைக்காரரை பட்டா கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது31). இவர் காரமடை பேருந்து நிலையம் அருகே தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரது கடைக்கு கடந்த வாரம் பாக்கியராஜ் என்பவர் வந்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக செந்தில்குமார் மற்றும் பாக்கியராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், நேற்று செந்தில்குமார் கடையை கவனித்துகொண்டு இருந்தபோது காரமடை பகுதியை சேர்ந்த கோகுல் கிருஷ்ணன் (வயது 22), காரமடை மரியபுரம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்கிற ஞானராஜ் (வயது27), மரியபுரம் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் (வயது47) ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் செந்தில் குமார் கடைக்கு வந்துள்ளனர். அப்போது, செந்தில்குமாரை வம்புக்கு இழுத்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.



மேலும், அவரிடம் பட்டா கத்தியை காட்டி யாரிடம் காசு கேட்கிறாய் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த செந்தில்குமார் இதுகுறித்து காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் காரமடை காவல் ஆய்வாளர் குமார், உதவி ஆய்வாளர் சுல்தான் இப்ராகிம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...