கோவை மாநகரில் சிறப்பு வாகன தணிக்கை - ஒரே நாளில் 618 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாநகரில் ஒரே நாளில் 618 பேர் மீது மோட்டர் வாகனச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை தகவல்.


கோவை: கோவை மாநகரில் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்த 971 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வாழ்த்து தெரிவித்து, தொடர்ந்து வாகனங்களை இயக்கும் போது பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

கோவை மாநகரத்தில், இவ்வாண்டு வாகன விபத்துகள் நடைபெறாமல், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு "விபத்தில்லா கோவை" உருவாக்கும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி, இன்று கோவை மாநகரில் 10 இடங்களில் (காளப்பட்டி ரோடு, பிளமேடு, BPL ஜங்ஷன், லட்சுமி மில் ஜங்ஷன், சரவணம்பட்டி சோதனை சாவடி, துடியலூர் ரோடு, ரத்தினம் காலேஜ் பொள்ளாச்சி ரோடு, நேரு காலேஜ் கிருஷ்ணா காலேஜ் பாலக்காடு சாலை, உக்கடம் லாரி பேட்டை) சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு வாகன தணிக்கை முகாமில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 928 இருசக்கர வாகன ஓட்டிகளில், 618 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு. 310 நபர்கள் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், 1899 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், அந்தந்த சிறப்பு வாகன தணிக்கை முகாமில், தன்னார்வ அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, சிறுவர்கள் போக்குவரத்து பூங்காவில் (CHILDREN'S TRAFFIC PARK) உள்ள பயிற்சி மையத்தின் மூலமும், விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டது.

மேலும் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்த 971 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, தொடர்ந்து வாகனங்களை இயக்கும் போது பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...