கோவை மாநகரில் சிறப்பு வாகன தணிக்கை - ஒரே நாளில் 618 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாநகரில் ஒரே நாளில் 618 பேர் மீது மோட்டர் வாகனச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை தகவல்.


கோவை: கோவை மாநகரில் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்த 971 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வாழ்த்து தெரிவித்து, தொடர்ந்து வாகனங்களை இயக்கும் போது பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

கோவை மாநகரத்தில், இவ்வாண்டு வாகன விபத்துகள் நடைபெறாமல், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு "விபத்தில்லா கோவை" உருவாக்கும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி, இன்று கோவை மாநகரில் 10 இடங்களில் (காளப்பட்டி ரோடு, பிளமேடு, BPL ஜங்ஷன், லட்சுமி மில் ஜங்ஷன், சரவணம்பட்டி சோதனை சாவடி, துடியலூர் ரோடு, ரத்தினம் காலேஜ் பொள்ளாச்சி ரோடு, நேரு காலேஜ் கிருஷ்ணா காலேஜ் பாலக்காடு சாலை, உக்கடம் லாரி பேட்டை) சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு வாகன தணிக்கை முகாமில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 928 இருசக்கர வாகன ஓட்டிகளில், 618 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு. 310 நபர்கள் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், 1899 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், அந்தந்த சிறப்பு வாகன தணிக்கை முகாமில், தன்னார்வ அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, சிறுவர்கள் போக்குவரத்து பூங்காவில் (CHILDREN'S TRAFFIC PARK) உள்ள பயிற்சி மையத்தின் மூலமும், விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டது.

மேலும் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்த 971 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, தொடர்ந்து வாகனங்களை இயக்கும் போது பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...