உடுமலையில் வெளுத்து வாங்கும் கனமழை- மக்கள் மகிழ்ச்சி

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் வெயில் வாட்டி வந்த நிலையில், கனமழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



திருப்பூர்: உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை வெளுத்து வாங்கியது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே பகல் நேரங்களில் வெயில் அதிகமாகவும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாகக் காணப்பட்டது.

இதனால் மாறுபட்ட சீதோசன நிலை காரணமாகப் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்த நிலையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.



இதற்கு இடையில் தற்பொழுது இடைவிடாமல் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கி வருவதால் கடும் வெப்பத்தால் அவதி அடைந்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



இருப்பினும் நகரப்பகுதியில் வணிக நிறுவனங்களைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் செல்ல முடியாமல் உரிமையாளர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...