உடுமலையில் வெளுத்து வாங்கும் கனமழை- மக்கள் மகிழ்ச்சி

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் வெயில் வாட்டி வந்த நிலையில், கனமழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



திருப்பூர்: உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை வெளுத்து வாங்கியது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே பகல் நேரங்களில் வெயில் அதிகமாகவும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாகக் காணப்பட்டது.

இதனால் மாறுபட்ட சீதோசன நிலை காரணமாகப் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்த நிலையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.



இதற்கு இடையில் தற்பொழுது இடைவிடாமல் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கி வருவதால் கடும் வெப்பத்தால் அவதி அடைந்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



இருப்பினும் நகரப்பகுதியில் வணிக நிறுவனங்களைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் செல்ல முடியாமல் உரிமையாளர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...