திருப்பூரில் பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள் - போலீசார் குவிப்பு!

திருப்பூர் அடுத்த தொட்டி மன்னரை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.



திருப்பூர்: திருப்பூர் அருகேயுள்ள தொட்டி மன்னரை பகுதியில் முறைகேடாக இயங்கி வந்த பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு தொட்டி மன்னரை அருகேயுள்ள ரோஜா நகர் பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில் குடியிருப்புகளுக்கு நடுவே கடந்த 7 ஆண்டுகளாக முனியசாமி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கழிவுகள் அரைக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.



இந்த பிளாஸ்டிக் அரைக்கும் தொழிற்சாலையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் குழந்தைகள், பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.



இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அரைக்கும் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பொதுமக்கள் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.



இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் அரைக்கும் தொழிற்சாலையை ஆய்வு செய்த பொழுது பிளாஸ்டிக் தொழிற்சாலை முறைகேடாகவும் எந்த அனுமதியும் பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து முறைகேடாக இயங்கி வந்த பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலையை இயக்க கூடாது எனவும் முறையாக அனுமதி பெற்ற பின்னர் தான் இயக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தொழிற்சாலையை அகற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...