கோத்தகிரி அருகே உலா வரும் கரடி - கூண்டு வைத்து பிடிக்கக் கோரிக்கை!

கோத்தகிரி அருகே உள்ள பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சம். கூண்டு வைத்து கரடியை விரைவில் பிடிக்கும்படி மக்கள் கோரிக்கை.



நீலகிரி: பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியைப் பிடிக்கப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து அரவேணு செல்லும் சாலையில் பெரியார் நகர் பகுதி உள்ளது. இங்குள்ள குடியிருப்பைச் சுற்றிக் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 கருஞ்சிறுத்தை, 2 சிறுத்தை என 4 சிறுத்தைகள் உலா வந்தன.

அதேபோல் கரடிகளும் தொடர்ந்து உலா வந்தன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வந்தனர். மேலும் கரடிகளைக் கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினருக்குத் தொடர் கோரிக்கை விடுத்தனர்.



இதனையடுத்து கடந்த சில நாட்களாகக் கரடி நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஒற்றைக் கரடி உலா வந்தது. நீண்ட நேரம் குடியிருப்பைச் சுற்றி வந்த கரடி பின்பு தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது.

அப்பகுதியில் உள்ள குடியிருப்பைச் சுற்றி கரடிகள் தொடர்ந்து உலா வருவதை வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து கூண்டு வைத்துப் பிடித்து, வேறு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரியில் பிடிபட்ட இரண்டு கரடிகள் முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....