கோத்தகிரி அருகே உலா வரும் கரடி - கூண்டு வைத்து பிடிக்கக் கோரிக்கை!

கோத்தகிரி அருகே உள்ள பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சம். கூண்டு வைத்து கரடியை விரைவில் பிடிக்கும்படி மக்கள் கோரிக்கை.



நீலகிரி: பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியைப் பிடிக்கப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து அரவேணு செல்லும் சாலையில் பெரியார் நகர் பகுதி உள்ளது. இங்குள்ள குடியிருப்பைச் சுற்றிக் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 கருஞ்சிறுத்தை, 2 சிறுத்தை என 4 சிறுத்தைகள் உலா வந்தன.

அதேபோல் கரடிகளும் தொடர்ந்து உலா வந்தன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வந்தனர். மேலும் கரடிகளைக் கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினருக்குத் தொடர் கோரிக்கை விடுத்தனர்.



இதனையடுத்து கடந்த சில நாட்களாகக் கரடி நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஒற்றைக் கரடி உலா வந்தது. நீண்ட நேரம் குடியிருப்பைச் சுற்றி வந்த கரடி பின்பு தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது.

அப்பகுதியில் உள்ள குடியிருப்பைச் சுற்றி கரடிகள் தொடர்ந்து உலா வருவதை வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து கூண்டு வைத்துப் பிடித்து, வேறு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரியில் பிடிபட்ட இரண்டு கரடிகள் முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...