உலக சதுப்பு நில தினம்: உதகை அரசு கல்லூரியில் கட்டுரை, ஓவியம் போட்டி!

உதகை அரசு கலைக்கல்லூரியில் சதுப்பு நிலங்களை பாதுகாப்பது குறித்து நடைபெற்று வரும் கட்டுரை, ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில் உலக சதுப்பு நில தினத்தையொட்டி, சதுப்பு நில பாதுகாப்பு குறித்த தலைப்பில், பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ந்தேதி உலக சதுப்பு நில தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சதுப்பு நிலங்கள் மண் அரிப்பை தடுப்பதற்கும், கடல் அலைகள் மற்றும் சூறைக்காற்றில் இருந்து மரங்களை காக்கவும், தண்ணீரை அதிக நாட்கள் சேமித்து வைக்கவும் உதவுகிறது.



இதனையொட்டி உதகை அரசு கலைக்கல்லூரியில் சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பாதுகாக்கும் விதமாக மாவட்ட அளவிலான ஓவிய போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.



நீலகிரி மாவட்ட உதவி வன அலுவலர் தேவராஜ் தலைமையில், வனவிலங்கு அறிவியல் துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன் முன்னிலையில், இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில் அரசு கலை கல்லூரி பொறுப்பு முதல்வர் எபினேசர் மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...