கோவையில் 'சாரங்' எனும் கிராப்ட் பஜார் 2023 கண்காட்சி தொடக்கம் - தமிழ்நாடு கைவினைக்கழகம் ஏற்பாடு!

கோவை சிங்கநல்லூரில் தமிழ்நாடு கைவினைக்கழகம் சார்பில் சாரங் எனும் கிராப்ட் பஜார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியுள்ளது.



கோவை: சிங்கநல்லூரில் தமிழ்நாடு கைவினைக்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கிராப்ட் பஜாரில் 80-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன.



இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:

கண்காட்சியில், டை, சாய் மற்றும் பாடிக் புடவைகள், மெட்டீரியல்கள், காந்தா, கை எம்ப்ராய்டரி புடவைகள், சூட்டுகள், போச்சம்பள்ளி, மங்கல்கிரி புடவைகள், டிரஸ் மெட்டீரியல்கள், மகேஷ்வரி புடவைகள், மெட்டீரியல்கள், சரிகை பொருட்கள், பாக்ரு புடவைகள் இடம்பெற்றுள்ளன.



அதுமட்டுமின்றி, டெர்ராகோட்டா, மெட்டல், பீட் நகைகள், டஸ்ஸர் பட்டு, இயற்கை இழை தயாரிப்புகள், பட்டு பாய்கள், கையால் செய்யப்பட்ட கூடைகள், ராஜஸ்தானி ஜூட்ஸ், சணல் காலணிகள், தோல் காலணிகள், பஞ்சாபி ஜூட்ஸ், கோலாபூரி காலணிகள், டோக்ரா உலோக பொருட்கள், கலம்காரி, மதுபாணி, மினியேச்சர் ஓவியம், இயற்கையாக கையில் தயாரிக்கப்பட்ட தோல் பராமரிப்புப் பொருட்கள்,



குருவாயூர் சுவர் ஓவியங்கள், கையால் வடிவமைப்பு, டர்ரிஸ், தரை விரிப்புகள், ஜரிகை வேலை, கலை நயமான தோல் பைகள், பழங்குடியின கை எம்பிராய்டரிகள், ஒரிசா பட்டு, பருத்தி, அரக்கு நூல், மணி வளையல்கள் போன்றவை, விலை மதிப்பற்ற அணிகலன்கள், டோக்ரா ஆபரணங்கள், மர, சந்தனமரம் செதுக்குதல், குர்த்திஸ், குர்த்தாஸ்,



சூட்டுகள், மகேஸ்வரி புடவைகள், பாத், பிச்வாய், கவாட், பட்டஞ்சித்திரா ஓவியங்கள், சாஞ்சி ஓவியங்கள், டெர்ராகோட்டா, கருப்பு மட்பாண்டம், சணல் காலணி, பைகள் முதலியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 5 ம் தேதி வரை நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...