உலகம் முழுவதும் 1500 பேருக்கு மைக்ரோ சர்ஜரி லேப் பயிற்சி - கோவை கங்கா மருத்துவமனை சாதனை

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 68 நாடுகளைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு மைக்ரோ சர்ஜரி லோப் பயிற்சி அளித்து கோவை கங்கா மருத்துவமனை புதிய சாதனையை படைத்துள்ளது.


கோவை: கோவை கங்கா மருத்துவமனையில் உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் உள்ள மைக்ரோ சர்ஜரி லேப், வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் உள்ள 142 நகரங்கள் உட்பட 68 நாடுகளில் இருந்து 1500 அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இந்த பயிற்சியை அளித்துள்ளது.

இதுகுறித்து கங்கா மருத்துவமனையின் பிளாஸ்டிக், கை மற்றும் மறுசீரமைப்பு நுண் அறுவை சிகிச்சை துறை இயக்குனர் டாக்டர் எஸ். ராஜ சபாபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மைக்ரோ வாஸ்குலர் அறுவை சிகிச்சை என்பது 1.0 மிமீ விட்டம் கொண்ட ரத்த நாளங்களை இணைப்பதை உள்ளடக்கியது. இதில்1.0மிமீ அளவுள்ள சிறிய ரத்த நாளங்களில் 4 முதல் 5 தையல்கள் போட அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த நுண்கலையை கற்பிக்க எங்கள் மருத்துவமனையில் கடந்த2000–ம்ஆண்டு இந்தமைக்ரோ சர்ஜரி லேப் ஆரம்பிக்கப்பட்டது. இதில், பயிற்சிபெறுபவர்களுக்கு ஒரு வார காலம் அறுவை சிகிச்சை அரங்கில் உருவகப்படுத்தப்பட்ட நிலையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கங்கா மருத்துவமனையில் உள்ள மைக்ரோ லேப் உலகின் மிகச் சிறந்த ஆய்வகங்களில் ஒன்றாக பிரபலமடைந்து வருகிறது.

இந்தியாவின் 142 நகரங்கள் மற்றும் 68 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து பயிற்சிபெற்றிருப்பது கோவை நகருக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த ஆய்வகம் வளரும் நாடுகளை சேர்ந்தவர்களை மட்டுமல்லாமல் வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களையும் வெகுவாக கவர்ந்துவருகிறது.

இங்குபயிற்சிபெற்ற1500 பேரில், 164 அறுவை சிகிச்சை நிபுணர்கள் இங்கிலாந்திலிருந்தும், 82 அறுவை சிகிச்சை நிபுணர்கள் அமெரிக்காவிலிருந்தும் வந்திருந்தனர். இந்த மைக்ரோ சர்ஜரி ஆய்வகத்தில் தற்போது 4 நுண்ணோக்கிகள் உள்ளன. ஒரே நேரத்தில் 4 பேர் பயிற்சிபெறலாம். இதில் முதல் 1000 பேருக்கானபயிற்சி என்ற நிலையை எட்ட சுமார் 18 ஆண்டுகள் ஆனது. ஆனால், அடுத்த 500 பேர் 5 ஆண்டுகளில் பயிற்சிபெற்றுள்ளனர்.



இந்த பயிற்சியைப் பெற்ற 4 பேரில் 3 பேர் புதுடெல்லியைச் சேர்ந்தவர்கள். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 2 பேர், புதுடெல்லியில் உள்ள டாக்டர் ஆர்.எம்.எல். மருத்துவமனையைச்சேர்ந்த ஒருவர் மற்றும் போபாலில் இருந்து ஒருவர் எனப் யிற்சிபெற்றுள்ளனர். நுண்அறுவைசிகிச்சை பயிற்சிக்காக வரும் மருத்துவ நிபுணர்களுடன், மருத்துவம் சார்ந்த பல்வேறு விஷயங்களில் பயிற்சிபெறவும் 70 நாடுகளில் இருந்து மொத்தம் 2800 அறுவை சிகிச்சை நிபுணர்கள் காங்கா மருத்துவனைக்கு வந்துள்ளனர்.

இந்த மருத்துவமனை குறுகிய கால மற்றும் நீண்ட கால பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறது. பல வளரும் நாடுகளில் மக்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் காயங்களால் ஏற்படும் உடல்உறுப்பு பாதிப்பை மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மூலம் சீரமைக்கும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையில் காங்கா மருத்துவமனை முக்கியபங்கு வகித்துவருகிறது.

இவ்வாறு மருத்துவர் ராஜ சபாபதி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...