உலகம் முழுவதும் 1500 பேருக்கு மைக்ரோ சர்ஜரி லேப் பயிற்சி - கோவை கங்கா மருத்துவமனை சாதனை

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 68 நாடுகளைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு மைக்ரோ சர்ஜரி லோப் பயிற்சி அளித்து கோவை கங்கா மருத்துவமனை புதிய சாதனையை படைத்துள்ளது.


கோவை: கோவை கங்கா மருத்துவமனையில் உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் உள்ள மைக்ரோ சர்ஜரி லேப், வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் உள்ள 142 நகரங்கள் உட்பட 68 நாடுகளில் இருந்து 1500 அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இந்த பயிற்சியை அளித்துள்ளது.

இதுகுறித்து கங்கா மருத்துவமனையின் பிளாஸ்டிக், கை மற்றும் மறுசீரமைப்பு நுண் அறுவை சிகிச்சை துறை இயக்குனர் டாக்டர் எஸ். ராஜ சபாபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மைக்ரோ வாஸ்குலர் அறுவை சிகிச்சை என்பது 1.0 மிமீ விட்டம் கொண்ட ரத்த நாளங்களை இணைப்பதை உள்ளடக்கியது. இதில்1.0மிமீ அளவுள்ள சிறிய ரத்த நாளங்களில் 4 முதல் 5 தையல்கள் போட அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த நுண்கலையை கற்பிக்க எங்கள் மருத்துவமனையில் கடந்த2000–ம்ஆண்டு இந்தமைக்ரோ சர்ஜரி லேப் ஆரம்பிக்கப்பட்டது. இதில், பயிற்சிபெறுபவர்களுக்கு ஒரு வார காலம் அறுவை சிகிச்சை அரங்கில் உருவகப்படுத்தப்பட்ட நிலையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கங்கா மருத்துவமனையில் உள்ள மைக்ரோ லேப் உலகின் மிகச் சிறந்த ஆய்வகங்களில் ஒன்றாக பிரபலமடைந்து வருகிறது.

இந்தியாவின் 142 நகரங்கள் மற்றும் 68 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து பயிற்சிபெற்றிருப்பது கோவை நகருக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த ஆய்வகம் வளரும் நாடுகளை சேர்ந்தவர்களை மட்டுமல்லாமல் வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களையும் வெகுவாக கவர்ந்துவருகிறது.

இங்குபயிற்சிபெற்ற1500 பேரில், 164 அறுவை சிகிச்சை நிபுணர்கள் இங்கிலாந்திலிருந்தும், 82 அறுவை சிகிச்சை நிபுணர்கள் அமெரிக்காவிலிருந்தும் வந்திருந்தனர். இந்த மைக்ரோ சர்ஜரி ஆய்வகத்தில் தற்போது 4 நுண்ணோக்கிகள் உள்ளன. ஒரே நேரத்தில் 4 பேர் பயிற்சிபெறலாம். இதில் முதல் 1000 பேருக்கானபயிற்சி என்ற நிலையை எட்ட சுமார் 18 ஆண்டுகள் ஆனது. ஆனால், அடுத்த 500 பேர் 5 ஆண்டுகளில் பயிற்சிபெற்றுள்ளனர்.



இந்த பயிற்சியைப் பெற்ற 4 பேரில் 3 பேர் புதுடெல்லியைச் சேர்ந்தவர்கள். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 2 பேர், புதுடெல்லியில் உள்ள டாக்டர் ஆர்.எம்.எல். மருத்துவமனையைச்சேர்ந்த ஒருவர் மற்றும் போபாலில் இருந்து ஒருவர் எனப் யிற்சிபெற்றுள்ளனர். நுண்அறுவைசிகிச்சை பயிற்சிக்காக வரும் மருத்துவ நிபுணர்களுடன், மருத்துவம் சார்ந்த பல்வேறு விஷயங்களில் பயிற்சிபெறவும் 70 நாடுகளில் இருந்து மொத்தம் 2800 அறுவை சிகிச்சை நிபுணர்கள் காங்கா மருத்துவனைக்கு வந்துள்ளனர்.

இந்த மருத்துவமனை குறுகிய கால மற்றும் நீண்ட கால பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறது. பல வளரும் நாடுகளில் மக்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் காயங்களால் ஏற்படும் உடல்உறுப்பு பாதிப்பை மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மூலம் சீரமைக்கும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையில் காங்கா மருத்துவமனை முக்கியபங்கு வகித்துவருகிறது.

இவ்வாறு மருத்துவர் ராஜ சபாபதி தெரிவித்தார்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...