பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் இறந்த நிலையில் பெண் யானை மீட்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் இறந்த நிலையில் பெண் யானையின் உடல் மீட்பு.


கோவை: நீலாம்பதி சரக பகுதியில் காப்புக் காட்டிற்குள் இறந்த நிலையில் பெண் யானை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தோலம்பாளையம் பிரிவு நீலாம்பதி சரக பகுதியில் காப்புக் காட்டிற்குள் வனப் பணியாளர்களின் வழக்கமான ரோந்துப் பணிக்குச் சென்றனர்.

அப்போது சுமார் 20-30 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை இறந்த நிலையிலிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் அந்த வனப் பகுதியைத் தணிக்கை செய்தனர்.

மேலும் மாலை நேரம் ஆனதால் இறந்த யானைக்கு நாளை காலை கோவை மாவட்ட வன அலுவலர், உதவி வனப் பாதுகாவலர், தன்னார்வ தொண்டு அமைப்பினர்கள், கிராம வனக் குழுத் தலைவர் மற்றும் வனக் பணியாளர்கள் முன்னிலையில், வனக் கால்நடை அலுவலர் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் உடல்கூறாய்வு பரிசோதனை நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...