பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் இறந்த நிலையில் பெண் யானை மீட்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் இறந்த நிலையில் பெண் யானையின் உடல் மீட்பு.


கோவை: நீலாம்பதி சரக பகுதியில் காப்புக் காட்டிற்குள் இறந்த நிலையில் பெண் யானை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தோலம்பாளையம் பிரிவு நீலாம்பதி சரக பகுதியில் காப்புக் காட்டிற்குள் வனப் பணியாளர்களின் வழக்கமான ரோந்துப் பணிக்குச் சென்றனர்.

அப்போது சுமார் 20-30 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை இறந்த நிலையிலிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் அந்த வனப் பகுதியைத் தணிக்கை செய்தனர்.

மேலும் மாலை நேரம் ஆனதால் இறந்த யானைக்கு நாளை காலை கோவை மாவட்ட வன அலுவலர், உதவி வனப் பாதுகாவலர், தன்னார்வ தொண்டு அமைப்பினர்கள், கிராம வனக் குழுத் தலைவர் மற்றும் வனக் பணியாளர்கள் முன்னிலையில், வனக் கால்நடை அலுவலர் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் உடல்கூறாய்வு பரிசோதனை நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.06.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...