உடுமலையில் பேருந்து படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் - காவல்துறை கவனிக்குமா?

உடுமலையிலிருந்து பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் பேருந்து படிகளிலேயே பயணம் செய்வதால் போலீசார் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.


திருப்பூர்: உடுமலையில் காலை, மாலை நேரங்களில் பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் படிகளிலேயே பயணம் செய்து வருவதால் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட பல வெளியூர்களுக்குச் சென்று படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பேருந்துகள் மூலமே பயணம் செய்கின்றனர்.



இதனால் தினசரி காலை வேளையில் உடுமலை பேருந்து நிலையத்தில் மாணவர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

இங்கிருந்து பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் பெரும்பாலான மாணவர்கள் அரசு பேருந்துகள், காலியாக செல்லும் நேரங்களிலும் தனியார் பேருந்துகளில் படிக்கட்டு வரை தொங்கிக் கொண்டு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இம்மாணவர்களை போலீசார் பலமுறை கண்டித்தும் அவர்கள் அதனை அலட்சியம் செய்கின்றனர். மாணவர்கள் என்பதால் போலீசார் ஒரு எல்லைக்கு மேல் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர்.

படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணிக்கும் மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீதும், அளவுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து நிர்வாகம் மீதும் போலீசாரும், போக்குவரத்து பிரிவு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...