உடுமலை அரசு மருத்துவமனையில் மூலிகை செடிகள் நடவு - மழை உடுமலை அமைப்பு பங்கேற்பு

‘மழை உடுமலை’ என்ற அமைப்பின் சார்பில், உடுமலை அரசு மருத்துவமனையின் சித்தா பிரிவில் பூங்கா இடத்தில் நொச்சி, கேசவர்த்தினி, பூனைமீசை, நிலவேம்பு உள்ளிட்ட பல்வேறு மூலிகை செடிகள் நடவு செய்யப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில், “மழை உடுமலை” அமைப்பின் சார்பில் பல்வேறு மூலிகை செடிகள் நடவு செய்யப்பட்டன.

உடுமலையில் செயல்பட்டு வரும் “மழை உடுமலை” அமைப்பின் 41வது தொடர் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் 55வது நிகழ்வாக, உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் மூலிகை செடிகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



அதன்படி உடுமலை அரசு மருத்துவமனையின் சித்தா பிரிவிலுள்ள பூங்கா இடத்தில் நொச்சி, கேசவர்த்தினி, பூனைமீசை, நிலவேம்பு உட்பட பல மூலிகை மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்வில் மழை உடுமலை ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீவர்ஷினி இளங்கோவன், மூலிகைச்செடிகளின் மருத்துவ பயன்கள் குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துரைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கலைமுகில் (பொறுப்பு), மருத்துவர்கள் சந்திரசேகரன், நௌஷத்பேகம், சித்தமருத்துவர்கள் லட்சுமிபதி ராஜு, கார்த்திகேயன், செவிலியர் கண்காணிப்பாளர் கனகலட்சுமி மற்றும் செவிலியர்கள், மழை உடுமலை, அபெக்ஸ், அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...