‘மழை உடுமலை’ என்ற அமைப்பின் சார்பில், உடுமலை அரசு மருத்துவமனையின் சித்தா பிரிவில் பூங்கா இடத்தில் நொச்சி, கேசவர்த்தினி, பூனைமீசை, நிலவேம்பு உள்ளிட்ட பல்வேறு மூலிகை செடிகள் நடவு செய்யப்பட்டன.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில், “மழை உடுமலை” அமைப்பின் சார்பில் பல்வேறு மூலிகை செடிகள் நடவு செய்யப்பட்டன.
உடுமலையில் செயல்பட்டு வரும் “மழை உடுமலை” அமைப்பின் 41வது தொடர் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் 55வது நிகழ்வாக, உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் மூலிகை செடிகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி உடுமலை அரசு மருத்துவமனையின் சித்தா பிரிவிலுள்ள பூங்கா இடத்தில் நொச்சி, கேசவர்த்தினி, பூனைமீசை, நிலவேம்பு உட்பட பல மூலிகை மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த நிகழ்வில் மழை உடுமலை ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீவர்ஷினி இளங்கோவன், மூலிகைச்செடிகளின் மருத்துவ பயன்கள் குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கலைமுகில் (பொறுப்பு), மருத்துவர்கள் சந்திரசேகரன், நௌஷத்பேகம், சித்தமருத்துவர்கள் லட்சுமிபதி ராஜு, கார்த்திகேயன், செவிலியர் கண்காணிப்பாளர் கனகலட்சுமி மற்றும் செவிலியர்கள், மழை உடுமலை, அபெக்ஸ், அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
உடுமலையில் செயல்பட்டு வரும் “மழை உடுமலை” அமைப்பின் 41வது தொடர் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் 55வது நிகழ்வாக, உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் மூலிகை செடிகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி உடுமலை அரசு மருத்துவமனையின் சித்தா பிரிவிலுள்ள பூங்கா இடத்தில் நொச்சி, கேசவர்த்தினி, பூனைமீசை, நிலவேம்பு உட்பட பல மூலிகை மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த நிகழ்வில் மழை உடுமலை ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீவர்ஷினி இளங்கோவன், மூலிகைச்செடிகளின் மருத்துவ பயன்கள் குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கலைமுகில் (பொறுப்பு), மருத்துவர்கள் சந்திரசேகரன், நௌஷத்பேகம், சித்தமருத்துவர்கள் லட்சுமிபதி ராஜு, கார்த்திகேயன், செவிலியர் கண்காணிப்பாளர் கனகலட்சுமி மற்றும் செவிலியர்கள், மழை உடுமலை, அபெக்ஸ், அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.