உடுமலை அரசு மருத்துவமனையில் மூலிகை செடிகள் நடவு - மழை உடுமலை அமைப்பு பங்கேற்பு

‘மழை உடுமலை’ என்ற அமைப்பின் சார்பில், உடுமலை அரசு மருத்துவமனையின் சித்தா பிரிவில் பூங்கா இடத்தில் நொச்சி, கேசவர்த்தினி, பூனைமீசை, நிலவேம்பு உள்ளிட்ட பல்வேறு மூலிகை செடிகள் நடவு செய்யப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில், “மழை உடுமலை” அமைப்பின் சார்பில் பல்வேறு மூலிகை செடிகள் நடவு செய்யப்பட்டன.

உடுமலையில் செயல்பட்டு வரும் “மழை உடுமலை” அமைப்பின் 41வது தொடர் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் 55வது நிகழ்வாக, உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் மூலிகை செடிகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



அதன்படி உடுமலை அரசு மருத்துவமனையின் சித்தா பிரிவிலுள்ள பூங்கா இடத்தில் நொச்சி, கேசவர்த்தினி, பூனைமீசை, நிலவேம்பு உட்பட பல மூலிகை மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்வில் மழை உடுமலை ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீவர்ஷினி இளங்கோவன், மூலிகைச்செடிகளின் மருத்துவ பயன்கள் குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துரைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கலைமுகில் (பொறுப்பு), மருத்துவர்கள் சந்திரசேகரன், நௌஷத்பேகம், சித்தமருத்துவர்கள் லட்சுமிபதி ராஜு, கார்த்திகேயன், செவிலியர் கண்காணிப்பாளர் கனகலட்சுமி மற்றும் செவிலியர்கள், மழை உடுமலை, அபெக்ஸ், அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...