உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வீரர்கள் கோரிக்கை!

உடுமலையில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த விளையாட்டு துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தை சீரமைத்து மேம்படுத்த விளையாட்டுத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் விளையாட்டு திறன்களை வளர்க்க நகரின் மத்தியில் 6.30 ஏக்கர் நிலம் தானமாக பெறப்பட்டு நேதாஜி விளையாட்டு மைதானமாக மாற்றப்பட்டது.



பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தை பள்ளி மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், உடுமலை நகரின் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு முக்கிய பயிற்சிக்களமாக நேதாஜி விளையாட்டு மைதானம் விளங்கி வருகிறது.



ஹாக்கி, கிரிக்கெட், கூடைப்பந்து உட்பட விளையாட்டு வீரர்கள் நாள்தோறும் மைதானத்தில் பயிற்சி செய்து வருகின்றனர். மேலும் காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சியும் மேற்கொள்கின்றனர்.



மைதானத்தில் பயிற்சிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றன.

இந்நிலையில், நீண்ட இழுபறிக்கு பின் ஸ்கேட்டிங் பயிற்சிக்கான தளம் மட்டும் கட்டப்பட்டு உள்ளது. பிற பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மைதானத்தின் ஒரு பகுதி புதர் மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.



இந்த நிலையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் குழுவினர் நகராட்சி நிர்வாகம் வருவாய் துறையினர் உள்ளிட்ட குழு சார்பில் கடந்த 2019 ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதில், நேதாஜி மைதானத்தில் 6 கோடி ரூபாய் செலவில் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்படும் நடைபயிற்சி மேற்கொள்வர்களுக்கு தனியாக இடம், தடகளப் போட்டியில், பங்கேற்கும் வேலைகளுக்கு பயிற்சி செய்யவும், மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தவும் தனி ட்ராக் அமைக்கப்படும்.

இதற்கு தேவையான கருத்துருவை சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக தயாரித்து சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக இழுபறியாக இருந்த நேதாஜி மைதான மேம்பாடு விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிப்போடு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இத்திட்டத்தை கண்டு கொள்வதில்லை எனக்கூறும் வீரர்கள், மழை காலங்களில் கூடைப்பந்து மைதானத்தை ஒட்டி தண்ணீர் தேங்குவதும் ஸ்கேட்டிங் தளத்தின் அருகில் புதர் மண்டி விஷச்சந்துக்கள் நடமாடுவதும் தொடர்கதையாக உள்ளதாக கூறுகின்றனர்.

மைதானத்தின் மையப் பகுதிகள் மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக மாறுவதால் கிரிக்கெட் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி செய்ய முடியாத நிலையில் உள்ளது.

நூற்றுக்கணக்கான கிராமப்புற விளையாட்டு வீரர்களின் திறமையையும் அவர்களின் கனவையும் நினைவாக்கும் உதவும் மைதானத்தை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்பதே விளையாட்டு வீரர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...