வால்பாறை நகர்மன்ற கூட்டத்தில் அத்துமீறி நுழைந்தவர்களால் பரபரப்பு

கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து இடையூறு செய்த ஒருவர் கைது மற்றும் 10-க்கும் மேற்பட்டவர்கள் தலைமறைவு.


கோவை: வால்பாறை நகர்மன்ற கூட்டத்தில் அத்துமீறி நுழைந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று நகர்மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. இதில் 21 வார்டு உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர் பாலு,செயற்பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



கூட்டம் நடந்தது கொண்டு இருக்கும்போது கூட்டத்தில் அத்துமீறி 50-க்கும் மேற்பட்டவர்கள் நுழைந்து கூட்டத்தை நடத்த விடாமல் இடையூறு செய்தனர். இதனால் நகர மன்ற கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.



பின் நகர மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் பாலு அரசுப் பணியைச் செய்யவிடாமலும் நகர மன்ற கூட்டத்தில் அத்துமீறி நுழைந்தாலும்,கொலை மிரட்டல் விட்டனர் என்று 15 பேர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஆண்ட்ரூஸ் என்பவரைக் கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவு ஆனதால் அவர்களைத் தேடி வருகின்றனர்.

நகர மன்ற கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து கூட்டத்தில் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...