இம்மாத இறுதிக்குள் ரூ.250 கோடி வரி வசூலிக்க இலக்கு - கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தகவல்

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றம் எனவும், வரி வசூல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தகவல்.


கோவை: கோவை மாநகராட்சியின் 5 மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் சேமிப்பு நிதியில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.19.84 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் ஒப்புதல் அளித்துள்ளார்.



கோவை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இக்கூட்டத்தில் தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றது.



இதில் கோவை மாநகராட்சியின் 5 மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் சேமிப்பு நிதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.19.84 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த தீர்மானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பேசுகையில், கோவை மாநகராட்சியில் வரி வசூல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் ரூ.250 கோடி வரி வசூல் இலக்கை எட்டிவிடுவோம். ஒரே மாதத்தில் ரூ.30 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாகக் கடந்த 2 நாட்களில் ரூ.4.50 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் சார்பில் ரூ.50 கோடி நிதி விரைவில் மாநகராட்சிக்கு வர உள்ளது. சாலைப் பணிகள் இந்த நிதியில் மேற்கொள்ளப்படும் என்றார்.

இக்கூட்டத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் பேசுகையில்,மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். வளர்ச்சி பணிகள் தரமானதாகவும், விரைவாக மேற்கொள்ளப்படும். மாமன்ற உறுப்பினர்கள் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து நிறைவேற்றித்தரப்படும்," என்றார்.

கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி பேசுகையில்,டைட்டல் பார்க் பகுதிகளைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் நிறைய உள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

26ஆவது வார்டு மதிமுக கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி பேசுகையில்,கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் பொருளாதார பாடத்திட்டத்திற்கான ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. மேல்நிலைப் பள்ளியாக இருக்கும் காரணத்தால் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆகவே உடனடியாக அனைத்து பாடத்திட்டங்களுக்கும் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். கோவை மாநகராட்சி அனைத்து பொதுக் கழிப்பிடங்களும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜன.10 ஆம் தேதி வரை சுத்தம் செய்யப்படாமல் புதிய ஒப்பந்ததாரர் யார் என்று தெரியாமல் பழைய ஒப்பந்ததாரர் பணிக்கு வராமலும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்.

இது போன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்படாமல் தடுக்கும் வகையில், புதிய ஒப்பந்ததாரர் பணியைத் துவங்குவதற்கு வரும் வரை பழைய ஒப்பந்ததாரர் முழுமையாக இருந்து பொதுமக்களுக்குச் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



இக்கூட்டத்தில் துணை கமிஷனர் ஷர்மிளா, மண்டல அளவிலான அனைத்து துறை அதிகாரிகள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...