கோவையில் குடிபோதையில் மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு!

கோவை சின்னவேடம்பட்டியில் குடும்பத் தகராறில் குடிபோதையில் மாமியாரை தாக்கிய மருமகன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு.


கோவை: கோவையில் குடிபோதையில் மாமியாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி மலர்விழி (48). இவரது மகளை நாகராஜ் என்பவர் திருமணம் செய்துள்ளார். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

மருமகன் நாகராஜ் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த நாகராஜ் மீண்டும் அவரது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனை மாமியார் மலர்விழி தட்டிக்கேட்டதால், அவருக்கும் நாகராஜ்-க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மலர்விழியை நாகராஜ் கடுமையாக தாக்கி அவதூறாக பேசியதோடு வீட்டை விட்டு வெளியே தள்ளியுள்ளார். மீண்டும் அவரை கொடூரமாக தாக்கியதில் பலத்த ரத்த காயத்துடன் மலர்விழி மயங்கினார்.

இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் மலர்விழி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் மருமகன் நாகராஜ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...