வால்பாறை நகரமன்ற கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி

கோவை மாவட்டம், வால்பாறை நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தவிர பொதுமக்கள் கேள்வி கேட்டதால் கூட்டம் பாதியில் நிறுத்தம்.



கோவை: வால்பாறை நகரமன்ற கூட்டத்தில் திடீரென நுழைந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் 21 வார்டு உறுப்பினர்கள் மற்றும் நகரமன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் ஆணையாளர் பாலு மற்றும் பொறியாளர் வெங்கடாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இதில் வார்டு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அவர்களது வார்டு பகுதியில் உள்ள பிரச்சினைகளைப் பேசி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று வால்பாறை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், நகர மன்றம் கூட்டு அரங்கத்தில் நுழைந்தனர்.



நகர மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் பாலுவிடம் 10 மாதங்கள் ஆகியும் மக்கள் பணிகளைச் செய்யவில்லை, சாலை வசதி, தெருவிளக்கு குடிநீர் போன்ற தேவைகளுக்கு நகராட்சியில் வேலைகளுக்கு பலகோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை வேலைகள் நடக்கவில்லை என்று புகார்கள் எழுப்பினர்.



இதை தொடர்ந்து கவுன்சிலர்கள் நகரமன்ற கூட்டத்தில் பொதுமக்கள் எப்படி வருகிறார்கள், இது நகரமன்ற கூட்டமா? இல்லை பொதுக்கூட்டமா? என்று கேள்வி எழுப்பி கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தினர். சிறிது நேரத்தில் நகரமன்ற கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் நகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...