நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் - கொடியசைத்து தொடங்கி வைத்தார் கோவை ஆட்சியர்!

கோவையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தினை ஆட்சியர் சமீரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த வாகனம் செல்லும் வகையில் ஏற்பாடு.



கோவை: தமிழகத்தில் உணவகங்கள் மீது உணவின் தரம், கலப்படம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. இந்நிலையில், இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனை கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் தொடங்கிவைத்தார். அதன்படி, இந்த உணவு பகுப்பாய்வு வாகனங்கள் முதல் கட்டமாக கோவை சேலம் தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.



அதன்படி, கோவை வந்த நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் உட்பட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



இந்த நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இந்த வாகனத்தின் மூலம் 30 வகையான உணவுப் பொருட்களில் கலப்படங்களை கண்டறிய முடியும். மேலும், கலப்படம் குறித்த விளக்க படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த உணவு பகுப்பாய்வு வாகனம் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...