நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் - கொடியசைத்து தொடங்கி வைத்தார் கோவை ஆட்சியர்!

கோவையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தினை ஆட்சியர் சமீரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த வாகனம் செல்லும் வகையில் ஏற்பாடு.



கோவை: தமிழகத்தில் உணவகங்கள் மீது உணவின் தரம், கலப்படம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. இந்நிலையில், இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனை கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் தொடங்கிவைத்தார். அதன்படி, இந்த உணவு பகுப்பாய்வு வாகனங்கள் முதல் கட்டமாக கோவை சேலம் தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.



அதன்படி, கோவை வந்த நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் உட்பட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



இந்த நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இந்த வாகனத்தின் மூலம் 30 வகையான உணவுப் பொருட்களில் கலப்படங்களை கண்டறிய முடியும். மேலும், கலப்படம் குறித்த விளக்க படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த உணவு பகுப்பாய்வு வாகனம் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...