உடுமலையில் ஏப்.2-வது வாரத்தில் கரும்பு அரவைப் பணி தொடக்கம் - அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணிகள் ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எந்திரங்களை பராமரிப்பு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு எந்திரங்கள் பழுது காரணமாக கரும்பு விவசாயிகளிடம் இருந்து முழு அளவில் கரும்பை கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு முன்கூட்டியே ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கரும்பு அரவை பணியை தொடங்க வேண்டும்.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கரும்பு அரவை தொடங்கும் சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் கூறும்போது, 'அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வரும் ஆண்டில் இதுவரை 2 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில் கரும்பு கொள்முதல் செய்ய விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.



இன்னும் 200 ஏக்கர் பதிவு செய்யப்பட உள்ளது. 62 ஆண்டுகள் பழமையான ஆலையில் எந்திரங்கள் பழுதடைந்துள்ளது. ரூ.10 கோடியில் எந்திரங்கள் சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. கரும்பை எந்திரத்தில் தள்ளுவதற்கு எந்திர உதவி மேம்படுத்தப்பட்டு உள்ளது.

மார்ச் மாதத்துக்குள் இந்த சீரமைப்பு பணிகள் அனைத்தையும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரும்பு வெட்டும் தொழிலாளர்களை முன்கூட்டியே அழைத்துவந்து கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடுத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம்' எனத் தெரிவித்தார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...