கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

கோவை வெள்ளலூர் பேரூராட்சியை சேர்ந்த 23 விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.


கோவை: தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுடன் இணைந்து தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

கோவை வெள்ளலூர் பேரூராட்சியைச் சேர்ந்த சுமார் 23 பேர், இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு கடந்த 1942 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடந்த வெள்ளையனே வெளியேறு ரயில் கவிழ்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல 12 விடுதலை போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளனர்.

அந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்களுடன் இணைந்து தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.



அதனைத் தொடர்ந்து விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கப்பட்டன.



இந்த விழாவில், விடுதலை போராட்ட தியாகி வி.என்.அருணாச்சலம் நினைவை கூறும் வகையிலான அவரது வரலாறுகளைக் குறிக்கும் புத்தகம் வெளியிடப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமார், எழுத்தாளர் வேலாயுதம், கவிஞர் வடிவேலு மற்றும் முன்னாள் விடுதலை போராட்ட தியாகிகள் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...