கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

கோவை வெள்ளலூர் பேரூராட்சியை சேர்ந்த 23 விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.


கோவை: தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுடன் இணைந்து தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

கோவை வெள்ளலூர் பேரூராட்சியைச் சேர்ந்த சுமார் 23 பேர், இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு கடந்த 1942 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடந்த வெள்ளையனே வெளியேறு ரயில் கவிழ்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல 12 விடுதலை போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளனர்.

அந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்களுடன் இணைந்து தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.



அதனைத் தொடர்ந்து விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கப்பட்டன.



இந்த விழாவில், விடுதலை போராட்ட தியாகி வி.என்.அருணாச்சலம் நினைவை கூறும் வகையிலான அவரது வரலாறுகளைக் குறிக்கும் புத்தகம் வெளியிடப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமார், எழுத்தாளர் வேலாயுதம், கவிஞர் வடிவேலு மற்றும் முன்னாள் விடுதலை போராட்ட தியாகிகள் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...