கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

கோவை வெள்ளலூர் பேரூராட்சியை சேர்ந்த 23 விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.


கோவை: தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுடன் இணைந்து தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

கோவை வெள்ளலூர் பேரூராட்சியைச் சேர்ந்த சுமார் 23 பேர், இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு கடந்த 1942 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடந்த வெள்ளையனே வெளியேறு ரயில் கவிழ்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல 12 விடுதலை போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளனர்.

அந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்களுடன் இணைந்து தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.



அதனைத் தொடர்ந்து விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கப்பட்டன.



இந்த விழாவில், விடுதலை போராட்ட தியாகி வி.என்.அருணாச்சலம் நினைவை கூறும் வகையிலான அவரது வரலாறுகளைக் குறிக்கும் புத்தகம் வெளியிடப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமார், எழுத்தாளர் வேலாயுதம், கவிஞர் வடிவேலு மற்றும் முன்னாள் விடுதலை போராட்ட தியாகிகள் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...