கோவை பிச்சனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

பிச்சனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், குடும்பத்துடன் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள், பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பிச்சனூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு தேவையான அனைத்தும் செய்து தருவதாக முன்னாள் மாணவர்கள் உறுதியளித்தனர்.

பிச்சனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதில் 1997- 1998-ல் படித்த மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்.



கிராமப்புற பள்ளி என்பதால் அப்போது பள்ளிக்கு வரும் போது செய்த சேட்டைகள், மரத்தடி நிழலில் அமர்ந்து அரட்டை, ஒரே தட்டில் உணவு, சிறு வயது காதல் கதைகளையும் பேசி மகிழ்ந்தனர்.

அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் 25 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய ஆசிரியர்களையும் பூ கொடுத்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கினர்.



பின்னர் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவ, மாணவிகள் பள்ளி சீருடை போல ஒரே மாதிரி உடையை அணிந்து வந்து தாங்கள் படித்த வகுப்பறையில் அமர்ந்து கேலி, கிண்டல் அடித்து மகிழ்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஒரே தட்டில் உணவு சாப்பிட்டும், ஊட்டி விட்டுக் கலகலப்பாகக் கொண்டாடினர்.



இதே போல தங்கள் படித்த 1998 ஆண்டு மாணவர்கள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், போலீஸ், விவசாயம் என பல்வேறு துறைகளில் பணியாற்றி வருவதாகத் தெரிவித்த முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்குத் தேவையான வசதிகளைச் செய்ய உள்ளதாகத் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...