கோவை பிச்சனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

பிச்சனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், குடும்பத்துடன் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள், பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பிச்சனூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு தேவையான அனைத்தும் செய்து தருவதாக முன்னாள் மாணவர்கள் உறுதியளித்தனர்.

பிச்சனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதில் 1997- 1998-ல் படித்த மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்.



கிராமப்புற பள்ளி என்பதால் அப்போது பள்ளிக்கு வரும் போது செய்த சேட்டைகள், மரத்தடி நிழலில் அமர்ந்து அரட்டை, ஒரே தட்டில் உணவு, சிறு வயது காதல் கதைகளையும் பேசி மகிழ்ந்தனர்.

அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் 25 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய ஆசிரியர்களையும் பூ கொடுத்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கினர்.



பின்னர் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவ, மாணவிகள் பள்ளி சீருடை போல ஒரே மாதிரி உடையை அணிந்து வந்து தாங்கள் படித்த வகுப்பறையில் அமர்ந்து கேலி, கிண்டல் அடித்து மகிழ்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஒரே தட்டில் உணவு சாப்பிட்டும், ஊட்டி விட்டுக் கலகலப்பாகக் கொண்டாடினர்.



இதே போல தங்கள் படித்த 1998 ஆண்டு மாணவர்கள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், போலீஸ், விவசாயம் என பல்வேறு துறைகளில் பணியாற்றி வருவதாகத் தெரிவித்த முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்குத் தேவையான வசதிகளைச் செய்ய உள்ளதாகத் தெரிவித்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...