திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கான்கிரீட் சிலாப் விழுந்ததில் ஒருவர் பலி - இருவர் படுகாயம்..!

உடுமலை அடுத்த குமரலிங்கம் பகுதியில் கான்கிரீட் சிலாப் விழுந்ததில் படுகாயம் அடைந்த பிரகலாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் குமரலிங்கம் பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ்(48). இவருக்கு உடுமலை - பழனி சாலையில் சொந்தமான ஒரு கட்டிடம் இருந்து வந்தது.

இந்த கட்டிடத்தில் புதிதாக ஷட்டர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக கட்டிடத்தின் ஒரு பகுதியில் உள்ள சுவர் அகற்றப்பட்டு மேற்புறத்தில் கான்கீரிட் சிலாப் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அந்த சிலாப் கட்டிடத்துடன் சரியாக பொருந்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே உரிமையாளர் சுப்புராஜ், குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த மேசன் பிரகலாதன்(45) மற்றும் மணிகண்டன்(55) ஆகியோர் கான்கிரீட் ஸ்லாப்பின் கீழ் அமைக்கப்பட்டு இருந்த தாங்கு கட்டைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



அப்போது எதிர்பாராத விதமாக கான்கிரிட் ஸ்லாப் சரிந்து மூன்று பேர் மீதும் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த மூவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு உடுமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பலத்த காயமடைந்த பிரகலாதன் மற்றும் சுப்புராஜ் ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பிரகலாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...