திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கான்கிரீட் சிலாப் விழுந்ததில் ஒருவர் பலி - இருவர் படுகாயம்..!

உடுமலை அடுத்த குமரலிங்கம் பகுதியில் கான்கிரீட் சிலாப் விழுந்ததில் படுகாயம் அடைந்த பிரகலாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் குமரலிங்கம் பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ்(48). இவருக்கு உடுமலை - பழனி சாலையில் சொந்தமான ஒரு கட்டிடம் இருந்து வந்தது.

இந்த கட்டிடத்தில் புதிதாக ஷட்டர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக கட்டிடத்தின் ஒரு பகுதியில் உள்ள சுவர் அகற்றப்பட்டு மேற்புறத்தில் கான்கீரிட் சிலாப் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அந்த சிலாப் கட்டிடத்துடன் சரியாக பொருந்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே உரிமையாளர் சுப்புராஜ், குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த மேசன் பிரகலாதன்(45) மற்றும் மணிகண்டன்(55) ஆகியோர் கான்கிரீட் ஸ்லாப்பின் கீழ் அமைக்கப்பட்டு இருந்த தாங்கு கட்டைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



அப்போது எதிர்பாராத விதமாக கான்கிரிட் ஸ்லாப் சரிந்து மூன்று பேர் மீதும் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த மூவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு உடுமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பலத்த காயமடைந்த பிரகலாதன் மற்றும் சுப்புராஜ் ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பிரகலாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...