திருப்பூரில் தமிழர்கள் தாக்கப்பட்டதாகப் பரவிய செய்தி தவறானது..! - காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு பேட்டி

திருப்பூரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் துரத்தித் துரத்தி தாக்கியதாகப் பரவி வரும் வீடியோ தவறான செய்தி என்று திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு தகவல்.



திருப்பூர்: தமிழர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோ குறித்து விசாரிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு தெரிவித்துள்ளார்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள், உடன் பணிபுரியும் தமிழக தொழிலாளர்களைத் துரத்தித் துரத்தி தாக்குவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இது தொடர்பாக நேரடியாகக் களத்தில் விசாரிக்கையில், கடந்த 14ஆம் தேதி அன்று பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் இருவர் டீ குடிக்க வெளியே சென்ற போது அங்கு மதுபோதையிலிருந்த தமிழக இளைஞர்களுடன் சிகரெட் புகை ஊதியது தொடர்பாக வாக்குவாதம் எழுந்துள்ளது.

ஒரு கட்டத்தில் தமிழக இளைஞர்கள், வடமாநில தொழிலாளர்களைத் தாக்கியதாகவும், அதன் பின்னர் டீ இடைவெளிக்கு வெளியே வந்திருந்த வடமாநில தொழிலாளர்கள் தமிழர்களைத் தாக்கத் துரத்தியதும் தெரியவந்தது.

அந்த சமயத்தில் 15-வேலம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். காவலர்களைக் கண்டதும், தமிழக இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பி உள்ளனர். போலீசார் அந்த பகுதியில் விசாரித்த போதும் புகார் கொடுக்க யாரும் இல்லாததால் வழக்கு பதிவு செய்ய முடியாமல் இந்த சம்பவத்தைக் கைவிட்டனர்.

சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த சம்பவம் 12நாட்களுக்குப் பிறகு, வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாகப் பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்துப் பேசிய திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு கூறுகையில், திருப்பூர் மாநகரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாகத் தவறான செய்தி பரவி வருகிறது.

இரண்டு நபர்கள் டீ குடிக்க சென்ற போது ஏற்பட்ட பிரச்சனை. இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. யாருக்கும் காயமோ? பாதிப்போ இல்லை. இதனை இன்று நடைபெற்றது போல தவறாகச் சித்தரித்துப் பரப்பி உள்ளனர்.

சமூக வலைத்தளங்களைக் கண்காணித்து வருகிறோம். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இரண்டு தனிப்படை அமைத்துள்ளோம். ஒரு தனிப்படை சம்பவம் மற்றும் அதில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு தனிப்படை சமூக வலைத்தளங்களில் தவறாகத் தகவல் பதிவிட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். யாரும் இந்த சம்பவம் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...