கோவை கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் சார்பில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கோவை மாவட்ட அனைத்து கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி சங்க அலுவலகத்தில், அண்ணா கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட பொது செயலாளர் ஜி.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் கடுமையான மணல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மணல் விற்பனையாளர்கள் ஒரு யூனிட் மணலை ரூ 10,000ம் வரை விலையை உயர்த்தி விற்கிறார்கள். ஆனால் அரசு நிர்ணயித்துள்ள விலையோ ஒரு யூனிட் ரூ 650 மட்டும்தான். அத்துடன் லாரி வாடகையும் சேர்த்து கணக்கிடப்பட வேண்டும். ஆனால் வியாபாரிகள் மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி மணல் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளார்கள். 

எனவே, சமீப காலமாக நமது மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் எதுவும் நடப்பதில்லை. கட்டுமானப் பணிகள் நடக்காததால், தொழிலாளர்கள் வேலையின்றி பட்டினி கிடக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் பட்டினி சாவுகள் கூட நிகழலாம் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே, இந்த விசயத்தில் அரசு உடனடியாக தலையிட்டு மணல் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாலூக்கா தலைநகரங்களில் மணலை இருப்பு வைத்து அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என்றும், கோரிக்கை நிறைவேறாத சூழ்நிலை நீடித்தால் வரும் மார்ச் 1ம் தேதி கோவை டவுன்ஹால் அருகில் உள்ள பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

Newsletter

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...