நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் உதகையில் மனிதநேய வார விழா உற்சாக கொண்டாட்டம்

உதகை அடுத்த முத்தொரை பாலாடா பகுதியில் உள்ள மத்திய அரசின் பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற மனிதநேய வார விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


நீலகிரி: உதகையில் அருகேயுள்ள மத்திய அரசின் பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் மனிதநேய வார விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த முத்தொரை பாலாடா பகுதியில் மத்திய அரசின் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பாக இன்று மனித நேய வார விழா கொண்டாடப்பட்டது.



காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் கலந்து கொண்டு மாணவர்கள் இடையே சிறப்புரையாற்றினார்.



இந்த நிகழ்ச்சியில் உதகை நகர் டிஎஸ்பி யசோதா, உதகை ஊரக டிஎஸ்பி விஜயலட்சுமி, நஞ்சநாடு பஞ்சாயத்து தலைவர் சசிகலா, தோடர் இனத் தலைவி வாசமல்லி, மஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர், சிவக்குமார், அரசு வழக்கறிஞர் முகமது மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...