நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் உதகையில் மனிதநேய வார விழா உற்சாக கொண்டாட்டம்

உதகை அடுத்த முத்தொரை பாலாடா பகுதியில் உள்ள மத்திய அரசின் பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற மனிதநேய வார விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


நீலகிரி: உதகையில் அருகேயுள்ள மத்திய அரசின் பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் மனிதநேய வார விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த முத்தொரை பாலாடா பகுதியில் மத்திய அரசின் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பாக இன்று மனித நேய வார விழா கொண்டாடப்பட்டது.



காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் கலந்து கொண்டு மாணவர்கள் இடையே சிறப்புரையாற்றினார்.



இந்த நிகழ்ச்சியில் உதகை நகர் டிஎஸ்பி யசோதா, உதகை ஊரக டிஎஸ்பி விஜயலட்சுமி, நஞ்சநாடு பஞ்சாயத்து தலைவர் சசிகலா, தோடர் இனத் தலைவி வாசமல்லி, மஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர், சிவக்குமார், அரசு வழக்கறிஞர் முகமது மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...