பழைய 4 சக்கர வாகன விற்பனையாளர்களுடன் கோவை போலீசார் கலந்துரையாடல்

கோவையில் பழைய நான்கு சக்கர வாகன விற்பனையாளர்கள் மற்றும் போலீசார் இடையேயான கலந்துரையாடல் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.


கோவை: கோவையில் கடந்த தீபாவளி முதல் நாள், கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் வெடித்து சிதறிய சம்பவத்தை, தொடர்ந்து என்.ஐ.ஏ வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய கார், பழைய கார் விற்பனையகத்திலிருந்து வாங்கியது தெரியவந்தது. இதனால் ஏற்கனவே மாநகர போலீசார் பழைய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் உரிமையாளர்களிடம் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.



அதன் தொடர்ச்சியாக, கோவை மாநகரில் உள்ள பழைய நான்கு சக்கர வாகனங்களை வாங்கும் கடை உரிமையாளர்களுடன் மாநகர போலீசார் கலந்தாலோசனை மேற்கொண்டனர்.

அப்போது, ஒவ்வொருவரும் தாங்கள் வாங்கும் பழைய வாகனங்களின் முழுமையான சான்றிதழ்களை சரிபார்த்து வாங்க வேண்டும். சந்தேகப் படும்படியான வாகனங்கள் வந்தால் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டனர்.

மேலும், இந்த பணிகளில் என்னென்ன சிக்கல் உள்ளது என்பது குறித்தும் பழைய வாகன விற்பனையாளர்களிடம் போலீசார் கேட்டறிந்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...