கோவையில் 19 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குருப் 3 தேர்வு - 57.73 சதவீதம் பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி - குரூப் 3 தேர்வு கோவையில் 19 மையங்களில் நடைபெற்றது. இதில் 57.73 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.



கோவை: கோவையில் 19 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் -3 தேர்வு நடைபெற்றது.

தமிழ்நாட்டின் அரசாங்க காலி பணியிடங்களுக்கு டி என் பி எஸ் சி மூலமாக தேர்வு நடத்துகின்றனர். தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு இன்று நடைபெற்றது.



தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையங்களுக்குள் சென்றனர். 9.30 மணிக்கு வினாத்தாள்கள் தரப்பட்டு தேர்வு எழுத ஆரம்பித்தனர்.



நண்பகல் 12:30 மணி வரை தேர்வு நடந்த நிலையில், 12.45 மணிக்கு கிராஸ் செக்கிங் முடித்து தேர்வர்கள் மையங்களில் இருந்து வெளியே வந்தனர்.

தேர்வு குறித்து கருத்துத் தெரிவித்த தேர்வர்கள், குரூப்-3 தேர்வை சிறப்பாக எழுதியுள்ளோம். குறிப்பாக தமிழ், பொருளாதாரம், பொதுஅறிவு உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து கேள்விகள் இலகுவாக கேட்கப்பட்டிருந்தது.

பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு புத்தகங்களில் இருந்து பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. முந்தைய தேர்வுகளை விட இலகுவான கேள்விகள் தேர்வில் கேட்கப்பட்டு இருந்தது, என்றனர்.

கோ-ஆப்பரேட்டிவ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 15 பதவிகளுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. கோயமுத்தூரில் 19 தேர்வு மையங்களில் 5,954 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். வழக்கத்தை விட அதிக அளவிலான நபர்கள் தேர்வு எழுத வரவில்லை.

குறிப்பாக 2018 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். 3,436 பேர் தேர்வு எழுத இன்று வரவில்லை. அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 42.23 % சதவிகிதம் மட்டுமே தேர்வு எழுதினர், மீதமுள்ள 57.77 % தேர்வு எழுத வரவில்லை. கடந்த காலங்களைவிட இந்த ஆப்சென்ட் விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...