கூட்டுறவு அங்காடிகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை - கோவை தென்னை விவசாயிகள் கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடை மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் வலியுறுத்தல்.


கோவை: நியாயவிலைக்கடை மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேங்காய் எண்ணெய் மற்றும் அதன் மதிப்பு கூட்டு பொருட்கள் சத்துக்கள் மிகுந்த உணவு பொருட்கள் என மருத்துவ உலகம் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு, நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இது மானியமாக விற்கப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து 72 % எண்ணெய் வித்துக்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்கு பெருமளவில் மக்கள் வரிப்பணம் செலவிடப்படுகிறது. இதற்குப் பதிலாக தேங்காய் எண்ணெயை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.



வெளிநாடுகளில் இருந்து தேங்காய் புண்ணாக்கை இறக்குமதி செய்து அதிலிருந்து தேங்காய் எண்ணெய் எடுக்காமல் அராங்கங்களே நேரடியாக தென்னை விவசாயிகளிடமிருந்து தேங்காயை கொள்முதல் செய்து எண்ணை தயாரித்து, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நியாயவிலை கடைகள் மூலமாக விற்க வேண்டும்.

இதன் மூலம் அந்நிய செலாவணி குறைந்து உள்நாட்டு தென்னை வர்த்தகம் பொருளாதாரம் மேம்படும் என்று தென்னை விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

விலை வீழ்ச்சியால் நஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...