கோவை இடையர்பாளையம் பகுதியில் குட்கா பதுக்கல் - ஒருவர் கைது!

கோவை இடையர்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருந்த ஒருவரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 216 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: இடையர்பாளையத்தில் குட்கா பதுக்கி வைத்திருந்த ஒருவரை துடியலூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 216 கிராம் குட்கா பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருள்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.

அதன் அடிப்படையில், நேற்று துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து உதவி ஆய்வாளர் குருச் சந்திர வடிவேல் மற்றும் காவலர்கள் இடையர்பாளையம் அருகே உள்ள திருவள்ளுவர் நகர் பகுதிக்கு விரைந்து சென்று கடையில் சோதனையிட்டனர்.

அப்போது, ரவீந்திரன் என்பவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 216 கிராம் எடையுள்ள குட்காவையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ரவீந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...