கோவை அருகே விவசாய தோட்டத்தில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டுயானை - வைரலாகும் வீடியோ!

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கோவனூர் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டுயானை 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை தின்று சேதப்படுத்திச் சென்றது. காட்டு யானை தோட்டபகுதிக்குள் சுற்றித் திரியும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கோவனூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் ஒற்றை யானை புகுந்து 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பாலமலை வனப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகளில் சில யானைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.



இந்த நிலையில், நேற்று மாலை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்து உள்ள கோவனூர் பகுதியில் ஒற்றை காட்டு யானை உணவு தேடி வந்துள்ளது.



அங்கிருந்த குணா என்பவரது தோட்டத்திற்குள் இரவில் புகுந்த அந்த ஒற்றைக் காட்டுயானை, அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை தின்று சேதப்படுத்திச் சென்றது. காட்டு யானை தோட்டபகுதிக்குள் சுற்றித் திரிவதை அங்கிருந்தவர்கள் செல்போனில் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...